இலங்கை வங்கி கனிஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர் இராசக்கோன் புண்ணியராஜா 24.03.2016 இல் ஓய்வுபெற்றமை குறித்த வாழ்த்துப்பா

துலங்கு புகழ் தேசத்து இலங்கை வங்கியதில்
நலம்பெற எனவே எண்பத்தொன்றினில்
இணைந்தீர் வடமாகாணம் அமைந்த அலுவலகம்
தொடர்ந்தே தொய்வு இல் சேவையினில்
யாழ்ப்பாணம் சுன்னாகம் கிளிநொச்சி மானிப்பாய்..
இளமைத் துடிப்பொடு சுன்னாகம் மீண்டாய்!


காரைநகர் அமைந்த கிளையிலும் நிறைவாய்
ஒழுங்கு தூய்மை விளங்க திறன்கள் கூட்டியே
கனிஷ்ட நிறைவேற்று அதிகாரியாய் உயர்ந்தே
காங்கேயன் துறைக் கிளையதில் திகழ்ந்தாய்
மல்லாகம் பதியதில் மலர்ந்து நாம் புகழ்ந்திட
இளைப்பாறும் அகமதில் மகிழ்வின் பெருமிதம்!


தொல்புரம் பெற்ற பேறெனவே உதித்து
நல்மக்கள் பெற்றே யாழ்ப்பாணம் பெயர்ந்து
வைப்புகள் பெருக்கிடும் மார்க்கங்கள் தந்து
எல்லார்க்கும் சேமிப்பின் அருமையினை உவந்து
இல்லற வாழ்வின் பேற்றில் செறிவில்
இலங்கை வங்கியதன் நாமம் காத்தீரே!


பொறியியல் வலலுநராய் வசீகரன் சிறந்திட
காப்புறுதி துறையினில் தபோகரன் வளர்ந்திட
பொறியியல் கற்கையில் திவாகரன் திகழ்ந்திட
மருத்துவக் கற்கையில் ரிசாந்தினி மலர்ந்திட
உயர்தர கற்கையில் யசோகரன் வெனறிட
மககளின் உயர்வில் மலர்ந்து நிறைவீரே!


எழுபத் தாறு அகவை நிறைவுறும் வங்கியின்
ஏழ் ஐந்து ஆண்டுகள் ஏற்றத்தின் பங்களிப்பில்
புன்னகை மாறா இராசக்கோன் புண்ணியராசா
தன்னரிய சேவை தன்னால் எமக்கெல்லாம்
முன்னுதாரணமாய் பின்பற்றி நாமென்றும்
முதல்தர வங்கியதன் நாமம் நாட்டுவமே!


பெறுமவற்றுள் பேறு நற்பெயர் எனவே திகழ்ந்து
அறுபதாம் அகவையில் அகமகிழ்ந்து இளைப்பாறும்
புண்ணியம் சேர் ராசா மனையாள் சிவசக்தியொடு
எண்ணரிய நலன்கள் பெறு மக்கள் சிறப்பொடு
வருங்காலம் வதுவை புரிந்திடப் பேரர் பெற்றே
வாழிய வாழிய என வாழ்த்துவமே நயந்தே!


இலங்கை வங்கி காங்கேயன் துறை கிளை வாழ்த்துப்பாவிற்காக  இயற்றி வழங்கியது
ஆக்கம் அழ பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது