இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எப்போதோ எழுதிய கவிதை

தனிமை ஏக்கம் செந்தீப் பிளம்பாய் ஞாயிறு மறையும் அந்திப் பொழுதில் நீள்பிரிவில் உன்னை விடேனென விளம்பி மீள்வேன் ஈராண்டில் என உறுதி தந்து பேரூந்தில் ஏறிப் பிரிந்தாயே தலைவா! ஓரிரு நாட்கள் கொழும்பில் இருந்து முகிலூ டறுத்து வான்வழி செல்லும் வானூர்தி தன்னில் அமர்ந்தே சென்றாய் அமெரிக்கா அருகில் கனடாவில் நீயிருக்க கண்கலங்கி நானிங்கே! பனிமிகப் பொழியும் குளிர்ந்த பூமியின் குதூகல நினைவையும் பணம்பல கிடைக்கும் பாங்கையும் எழுதினாய் பக்கத்தில் நீயின்றி ஏக்கத்தில் நானிங்கு வாடிடும் வாட்டத்தை எப்படி அறிவாய்! மாலையில்  உந்தன் மார்பினை நினைந்தே இளையள் என் நெஞ்சம் இரந்தே நிற்கும் நிலையினை உணரா நீமிக உழைத்த பணத்தால் மனமது குளிருமென நினைக்கிறாய் நீயின்றி நாளோடுமோ? கடினம் மிகப்பட்டு அடிமையாய் நீயுழைத்து உறக்கம் குறைத்து உணவினைச் சுருக்கி எப்போதோ பிறக்கும் மகளுக்காய் உழைக்கிறாய் இப்போதே இருக்கும் இளையள் என்கனவை உணர்ந்து வாராயோ! சீவியம் செய்வதற்கு சிறிதச்சம் இருப்பினும் சித்திமாமி சோதரங்கள் உறவுடன் வாழ

காலையடி கிராமத்தில் கவிதை நூல் அறிமுகம் நிழல் படங்களாய்...

படம்
அழ. பகீரதனின் இப்படியும்… என்ற கவிதை நூலின் மூன்றாவது அறிமுக நிகழ்வு அவரது கிராமத்தில் அவரது தெருவில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் தைப்பொங்கல் தினத்தன்று நடைபெற்றது. இவ்விழாவில் கம்யூனிஸ்ட் தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் திருமதி வள்ளியம்மை அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றி விழாவில் பிரதி வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். விழாவில் அறிமுகவுரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களும் மதிப்பீட்டுரையை கலாநிதி ந. இரவீந்திரன் அவர்களும் ஆற்றினார். கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் தான் பிறந்த ஊரில் இருபது வருடங்களிற்கு பிறகு மன்றத்தில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

படித்ததில் பிடித்தது நன்றியுடன்

படம்
பாட்டா பாட்டிகளின் பாலுணர்வுகளும் செயற்பாடுகளும் பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல  உச்சரிக்க சங்கோசப்படுகிறோம். பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம். அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம். அம்மப்பாவிற்கு தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியைத் வருடிவிடும் அம்மம்மாவின் செயல் பிள்ளைகளுக்குச் சினமாக இருக்கிறது.  'தேவார திருவாசகம் ஓதிக் கொண்டு அல்லது வேதமொழிகளைப் படித்துக் கொண்டு மூலையில் கிடக்க வேண்டிய ஜன்மங்கள் அவர்கள்' போன்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் முதியவர்களின் பாலியல் உணர்வ

பொங்கல் நாளில் காலையடியில்…

படம்
மறுமலர்ச்சி மன்றம், காலையடி, பண்டத்தரிப்பு. அழ பகீரதனின் 'இப்படியும்......' கவிதை நூல் அறிமுக நிகழ்வு இடம் : மறுமலர்ச்சி மன்றம், காலையடி, பண்டத்தரிப்பு. காலம் : 14.01.2013 (திங்கள்) பி.ப. 3.30 எமது ஊரின் சமூக முன்னேற்ற செயற்பாட்டாளரும், இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவருமான அழ.பகீரதனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'இப்படியும்.......' நூலின் மூன்றாவது அறிமுக நிகழ்வு மறுமலர்ச்சி மன்றத்தினால் நடாத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் தலைமை : சு.யாதவன் (உபதலைவர் மறுமலர்ச்சி மன்றம்) வாழ்த்துரை : திரு சிறீஸ்கந்தராஜா (தலைவர் மறுமலர்ச்சி மன்றம்) அறிமுக உரை : சட்டத்தரணி சோ. தேவராஜா திறனாய்வு உரை : கலாநிதி ந. இரவீந்திரன் (சிரேஸ்ட விரிவுரையாளர் - தர்க்காநகர் கல்வியியற் கல்லூரி ) ஏற்புரை : அழ. பகீரதன்

பொங்கல் வாழ்த்து

படம்
பொங்குக பொங்கல் தங்குக இன்பம் மங்குக இன்மை ஓங்குக உண்மை நிறைக செழிப்பு மறைக வறுமை வளர்க பொதுமை வாழ்க புதுமை தைத்திருநாளாம் உழவர் நாளில் மேன்மை எய்துக மனிதம் எங்கும் வழிபிறக்கும் தையில் யுகம் தோன்றும் மனிதம் பொதுமையில் மலரும் மீண்டும்.