உன் அகத்தைத் தேடி!
என்ன நினைத்து எனை படைத்தனை?
என்ன எண்ணி எனை விதைத்தனை?
முளைவிட்ட எனது வளர்ச்சியில்
மூர்க்கத்தை ஏன் தந்தனை?
ஆர்க்கும் அடங்கா இயல்பினை
ஏனோ தந்தனை?
நேர் நின்று எதிர்க்கும் உணர்வை
எனக்குள் ஏனோ விதைத்தனை?
சொன்ன மொழியுள் சிந்தை விட்டே
இன்னும் இன்னும் ஏனோ
எனை எழுதத் தூண்டுறாய்!
எனை ஈன்ற என் தாயே?
எனக்குள் நீயே
எனிலும்,
எங்கு எங்கு நீயென
எல்லார் முகங்களிலும்
உன் அகத்தைத் தேடி
நகர்கின்றேன்...
நாட்கள் நகர்ந்திட!
என்ன எண்ணி எனை விதைத்தனை?
முளைவிட்ட எனது வளர்ச்சியில்
மூர்க்கத்தை ஏன் தந்தனை?
ஆர்க்கும் அடங்கா இயல்பினை
ஏனோ தந்தனை?
நேர் நின்று எதிர்க்கும் உணர்வை
எனக்குள் ஏனோ விதைத்தனை?
சொன்ன மொழியுள் சிந்தை விட்டே
இன்னும் இன்னும் ஏனோ
எனை எழுதத் தூண்டுறாய்!
எனை ஈன்ற என் தாயே?
எனக்குள் நீயே
எனிலும்,
எங்கு எங்கு நீயென
எல்லார் முகங்களிலும்
உன் அகத்தைத் தேடி
நகர்கின்றேன்...
நாட்கள் நகர்ந்திட!
கருத்துகள்