இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனது வயதினை ஒத்த அப்பாக்களின் பிள்ளைகளுக்கு

இலங்கை பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் குப்பனின் பையனும் ,சுப்பனின் பொண்ணும் ஏன் என் தந்தை சமூகத்தினால் ஒடுக்கப் படுகிறான் என்று என்றாவது சிந்தித்தீர்களா? சாதிக் கொடுமையால் ஒரு கிராமமே எரியூட்டப்பட்டதே அதற்காக போராடினீர்களா ? இன்றைய பொருளாதார வறுமை நிலை ஏன் ஏற்படுகிறது என்று கவலைப்பட்டீர்களா?அதற்கெதிராக ஒருங்கிணைக்கும் உணர்வாளர்களிடம் தேடிச் சென்றிருக்கிறீர்களா?ஏதாவது மாணவர் போராட்டம் தான் செய்து இருப்பீர்களா? அத்தகைய உணர்வாளர்களிடம் "மீடியா" வெளிச்சம் போட்டுக்காட்ட பணம் இல்லை.தேர்தலில் வெற்றி ஈட்டுவர்காக எவ்வளவு பணமும் கொட்டுவதற்கு தி மு க -அ தி மு க தயாராக உள்ளது .புலம் பெயர் நாடுகளில் இருந்து பெறும் பணத்தின் ஒருபகுதியை நெடுமாறனும்,வைக்கோவும்,சீமானு ம் சுவரொட்டிகளும்,கொடிக்களுமாக காட்டி,உங்கள் கல்வியைக் காவு வாங்கிறார்கள் தனியார் கல்லூரிகளில் உம்மை இணைத்துக் கொள்ள உம் அப்பனும் ஆத்தாவும் படும்பாடு எத்தகையது என்பது பற்றி என்றாவது சிந்தித்தார்களா?இலண்டனில் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். (  http://www.youtube.com/