வேண்டும் நினைவுகள்
வேண்டாம் என ஒதுக்கிலும்
மீண்டும் மீண்டும்
மனக்கதவை தட்டும்
நினைவுகள்.,
கொண்டாடிக் களிக்க
முடியுமா இன்று?
நாளைய கருமத்தை
கருதி
நித்திரை வேண்டியே
என் கண்கள் தவமிருப்பினும்
நினைவுகள்
தாண்டி என் மனமதில்
வேண்டுதல் செய்வது ஏன்?
கால ஓட்டத்தில்
கரைந்துபோன இளைமை போல்
இழந்து போவதில்லையே நினைவுகள்,
இன்று
நிலைப்பன
இன்பம் இலையெனில்!
கருத்துகள்