புதினம் பறையவோ?

மதிப்பு உள மாண்புடை வாழ்வில் எனில்
விதிமாறாய் உள்ளன செய்தியாய்
ஓதிட வந்தவிடத்து மாறுபாடாய்...
மாணவனை மணாளனாக்கிய ஆசிரியை என!
பதியடையப் பலதடைகள்
பண்ணி வைத்தனர் பாவையர்க்கே...
எதிலும் எப்படியும் எவ்வகையிலும்
எண்ணம் செலுத்திடில் மேன்மை உண்டாமோ?
பதிலும் வருமே பண்பிலை என்று
விதிவசமே வாழ்வென விட்டு விடுதலுமோ
புதுமையோ எனப் புதினம் பறையவோ

கதியோ சகத்தினில் தர்மம் ஆகுவதோ!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என