இடுகைகள்

டிசம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மொழியெலாம் ஒன்றே

படம்
மொழியெலாம் ஒன்றே , இதில் கழிவொன்றும் இல்லைக் காணும் இழிவாக நமக்குள்ளே ஏன் இனப்பூசல் வேண்டாம் விடும் . எம்மொழியே சிறந்த தென்றே தம்பட்டம் அடிக்கும் நிலை இம்மட்டும் போதும் அப்பா இனப்பூசல் வேண்டாம் அப்பா முன்னாளில் நாமெல்லாம் ஒன்றே முகத்தினில் சைகையினால் நன்றே அகத்தின் கருத்தைச் சொல்வொம் அதனால் நாமெலாம் ஒன்றே நிலத்தினில் வேறுபாடு தன்னால் நிலவிடும் மொழிகள் பலவாய் நீண்டு போயின் றுலகில் நிலவும் வேற்றுமை ஆயிற்றே எம்மொழி பேசினாலும் எங்கள் உள்ளக் கருத்தெலாம் ஒன்றே உண்மை இதுவென புரியில் உலவும் வேற்றுமை இலையே ! “ எம்மொழியும் நன்றே ! அன்றி உம்மொழியும் நன்றே !” என்ற எண்ணம் கொண்டிங்கு வாழில் எல்லார் நலனும் ஓங்கும் ! நன்கிதை அறிந்து கொண்டால் நன்மை எமக்கு பலவாம் அன்பினால் ஒன்றாகி நாங்கள் அகிலத்தில் நன்றே வாழ்வோம் ! இன்றே விடுவீர்   மொழிமோகம் இன்னோர் மொழியை பழிக்கும் தன்மை ஒழித்து நீவிர் இன்புற்று வாழ்வீர் உலகில் !

புலம்பெயர் தேசத்திலிருந்து ஒரு குரல்

படம்
நன்றி : பணிப்புலம் இணையம்

பண் கலை பண்பாட்டு கழக வெள்ளிவிழா

படம்
கனடாவிலுள்ள பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு விழா இன்று (25.12.12) நடைபெற இருக்கின்றது. இலங்கையிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கும் தமது ஊர் கிராமம் என்ற உணர்வோடு வாழ்வது அறிவீர்கள். அந்த வகையில் ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று கூடிதமது பண்பாட்டு அடையாளங்களை பேணும் வகையில் தமது ஊர் பெயர்களின் மன்றங்கள் அமைத்துச் செயற்பட்டுவருகின்றார்கள். அவ்வாறான ஒரு மன்றம் தான் பண்கலை பண்பாட்டுக் கழகம் என்பது. இது யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு சிறு நகரை அண்டியுள்ள ஊரான பணிப்புலம் என்ற கிராமத்தில் பிறந்து கனடாவில் வதியும் மக்களை ஒன்றிணைக்கும் அமைப்பாகத் திகழ்கின்றது. வருடந்தோறும் இந்த அமைப்பானது நவராத்திரி காலத்தில் வாணிவிழாவினையும் நத்தார் காலத்தில் ஒன்றுகூடல் கலை நிகழ்வையும் சிறப்பாக கொண்டாடிவருகின்றது. நாட்டியம் பாடல் நாடகம் என்ற கலை நிகழ்வுகளையும் சிறார் மத்தியில் கல்வி சார் போட்டிகளையும் நடாத்துவதோடு பண் ஒளி எனும் ஆண்டு மலரையும் வெளியிட்டுவருகின்றது.  அத்துடன் நின்றுவிடாது தமது கிராமத்தின் உயர்வுக்கும் அதன் வளர்ச்சிக்கும் பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கும் உதவி வருவதும் குறிப

இப்படியும் அறிமுகவிழாவில்....

படம்
சங்கானையில் இப்படியும் நூல் அறிமுகவிழா திரு மு. தியாகராஜா அவர்களின் தலைமையில் 23.12.2012 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. விழாவின் நிகழ்ச்சிகளை தேசிய கலை இலக்கிய பேரவை உறுப்பினர் சபா. தனுஜன் தொகுத்து வழங்க தலைமையுரை ஆற்ற தொடக்கவுரையை சட்டத்தரணி சோ. தேவராஜா ஆற்றினார். அவர் தனது உரையில் சங்கானை பிரதேசத்தில் அந்த காலத்தில் பல நாடக மன்றங்கள் இருந்த தாகவும் அங்கு பல நாடகங்கள் மாதந்தோறும் நடைபெற்றதாகவும் சிறப்பித்துப் பேசினார். மேலும் நூலின் உள்ளடக்கத்தில் உள்பொதிந்த விடயங்களைத் தொட்டு உரையாற்றினார். கவிஞர் எஸ். கருணாகரன் தனது அறிமுகவுரையில் கவிஞரின் இளமைக்கால இலக்கிய ஈடுபாட்டையும் அவருடனான தனது தொடர்பின் இறுக்கம் பற்றியும் கவிதையின் உள்பொதிந்த ஏக்கத்தையும் போரின் அழிவால் இழந்துபோனவை பற்றியும் அதுவே கவிஞரின் ஏக்கம் எனவும் பொருள்பட பேசினார். மதிப்புரை ஆற்றிய ஆசிரியர் ந. குகபரன் கவிஞரின் நூலுட் புகுந்து அதன் சுவையினை சபையோர் மத்தியில் தெளிவுறப் பேசினார். விழாவில் முதன்மைப் பிரதி கனடாவில் மறைந்த கிராம சமூக பற்றாளர் விசு க விமலன் அவர்களின் சகோதரி திருமதி தயாபரி மகேசன் அவர்களுக

சங்கானையில் 'இப்படியும்..' நூல் அறிமுகவிழா

புத்தூர் மேற்கு கலைமதி சனசமூகநிலையித்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட "இப்படியும்..." கவிதை நூலின் அறிமுக விழா எதிர்வரும் 23.12.2012 பிற்பகல் சங்கானை இலங்கை வங்கி மேல் மாடியில் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. சமூகநீதிக்கான வெகுஜன இயக்கத் தலைவர்  திரு. மு. தியாகராஜா (இளைப்பாறிய உப அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் தொடக்க உரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களும் அறிமுக உரையை கவிஞர் எஸ். கருணாகரன் அவர்களும் மதிப்பீட்டுரையை சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர் ந. குகபரன் அவர்களும் ஆற்றவுள்ளனர். ஏற்புரையை நூலாசிரியர் அழ. பகீரதன் ஆற்ற நன்றியுரை ஜெ.நிவர்சன் அவர்களால் ஆற்றப்படும். விழா தேசிய கலை இலக்கியப்பேரவை ஒழுங்கமைப்பில் நடைபெறும். 

யாழ்ப்பாணத்தில் தமிழறிஞர் கைலாசபதி நினைவு

படம்
தமிழறிஞரும் மாக்‌ஸிய ஆய்வாளருமான கைலாசபதி அவர்களின் முப்பதாவது நினைவையொட்டி தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் பேராசிரியர் க. கைலாசபதியின் 30வது ஆண்டு நினைவு நிகழ்வு-2012 எதிர்வரும் 22.12.2012 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலியில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள செயல்திறன் அரங்க இயக்க மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நிகழ்விற்கு திரு. சோ.தேவராஜா அவர்கள் தலைமை தாங்குகின்றார். திரு. க. சீலன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் நிகழ்வு ஆய்வரங்கில் "ஆற்றுப்படுத்தும் அரங்காக கூத்து" எனும் தலைப்பில் ஆய்வுரையை செல்வி யாழினி யோகேஸ்வரன் வழங்க கருத்துரையினை திருமதி ச. ஜெயந்தி ஆற்றுகின்றார். "கல்வி முறைமையும் தொழிலாய்வும் என்ற தலைப்பில் ஆய்வுரையை திரு. நா. சாந்தன் வழங்க கருத்துரையை திரு. எம். இராசநாயகம் ஆற்றுகின்றார். "தேசியமும் தொன்மைக்கான வேட்கையும்" என்ற தலைப்பில் ஆய்வுரையை திரு. த. ஶ்ரீபிரகாஸ் வழங்க கருத்துரையை திரு, க. தணிகாசலம் அவர்கள் ஆற்றுகின்றார். இறுதியில் "அவசரம்" என்ற ஓரங்க நாடகத்தினை  திரு. த. கில்மன் அவர்கள் வழங்க திர

புத்தக வெளியீட்டு விழா நிழற்படங்களாய்...

படம்
அழ.பகீரதனின் இப்படியும் கவிதை நூல் வெளியீடு புத்தூர் மேற்கு கலைமதி மக்கள் மண்டபத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூலினை தாயகம் ஆசிரியர் திரு க. தணிகாசலம் வெளியிட முதல் பிரதியினை திரு கதிர்காமநாதன்(செல்வம்) அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கிராம மக்கள் அனைவரும் சிறப்புப்பிரதி பெற்று சிறப்பித்தனர். மேலும் நிகழ்வில் சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்கள் நயப்புரை ஆற்றினார். சிறுவர் சிறுமியர் கவிகளை உரைத்தனர். புதியபூமி ஆசிரியர் திரு சி.கா. செந்திவேல் கருத்துரை ஆற்றினார்