இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெரு முனையில் நான்

படம்
தெருவில் நான் பயணிக்கின்றேன் தெரு என்னைச் சுமந்து செல்கின்றது தெருவில்  என்னை நகர்த்துகின்றது வாகனம் நானே தெருவை நகர்த்துதல் இலையாயினும் நான் தெருக்களை நகர்த்துவதாய் உணர்கின்றேன் நகரும் வாகனங்களில் நபர்கள் நகர்கின்றனர் அவரவர் முகங்களில் அவரவர் வேகம் அவரவர் நோக்குகளில் அவரவர் மார்க்கம் பெறுமவற்றுள் யாதொன்றும் பேறிலையாயினும் பயணங்கள்  ஏனோ பலகாலும் தொடர்கின்றன அறுநிலை வரினும் ஆரும் உணருதலின்றி அயற்சி இன்றி முயலுவர் பயணங்களில்.. பயனற்றன எனிலும் பயணங்களில் மனக்குவிப்புடன் பயணிப்பதுவே இலக்காய்! தெருக்கள் எங்கும் நானும் திரிகின்றேன் இலக்கு எதுவென அறியாது புலம்புகின்றேன் போகுமிடம் எங்குளதென புரியாது நகர்கின்றேன் யாரிடம் வினவின் யார் எடுத்துரைப்பர்? யாரும் அறிவரோ யான் போம் இடம்! ஊடகம் ஒன்றுளது தேடகம் அதுவென கூகுளுக்குள் குவிகின்றது என்முகம் தெருவில் ஓரத்தில் நான் ஒதுங்கி.. தெருவில் கடப்பவர் பலர் உளர் தெருவில் நடப்பவர் யார் உளர் தெருவே என்னை வியப்பாய் பார்க்க பார்ப்பார் யாருமில்லை பயணம் குறியாய்... தெருக்கள் யாருக்காய்; யார் தெருக்களோ? சுருங்கிய உலகுள் நானோ குசலம்

உயரப் போகும் பாப்பா

படம்
சின்னச் சின்னப் பாப்பா! சிவந்த நல்ல பாப்பா! கண்ணைச் சிமிட்டி என்னைக் கவரும் நல்ல பாப்பா! பஞ்சைப் போன்ற உடலால் நெஞ்சைக் கவரும் பாப்பா! கொஞ்சச் சொல்லி என்னைத் தஞ்சம் அடையும் பாப்பா! பாவம் என்பது அறியாப் பச்சை உள்ளப் பாப்பா கோபம் ஆசை குரோதம் கொள்ளா நல்ல பாப்பா! மனதைக் கவரும் விதமாய் மாண்பு கொண்ட பாப்பா உலகைக் காணும் உவகையில் உயரப் போகும் பாப்பா பூபாளம் கவிதை இதழில் 1983 ஜனவரியில் பிரசுரமான கவிதை சில மாற்றங்களுடன் அழ பகீரதன்

ஆற்றைக் கடந்த குட்டிக் குதிரை

படம்
ஒரு பெண் குதிரையும் அவளது ஒரே மகனும் குன்று ஒன்றில் வசித்து வந்தன. நாள் முழுவதும் தாயுடன் இருக்கவே குட்டிக் குதிரை விரும்பியது. அது ஒரு கணமேனும் தாயை விட்டுப் பிரிந்து சென்றதே இல்லை. ஒரு நாள் தாய்க்குதிரை மகனைப் பார்த்துச் சொன்னது: "மகனே, நீ இப்போது வளர்ந்து விட்டாய். கொஞ்சம் எனக்கு ஒத்தாசையாக உதவி செய்து ஆறுதலளிக்கக் கூடாதா?" குட்டிக் குதிரை தலையை அசைத்துச் சொன்னது: "ஏன் முடியாது. எனக்கு உண்மையாக, வேலை செய்ய நல்ல விருப்பம்." மிகவும் மகிழ்ந்துபோன தாய்க்குதிரை சொன்னது: "நல்ல பையன், இப்ப எனக்காக கோதுமை மூட்டையைச் சுமந்து கொண்டு மில்லுக்கு போகவேணும்." குட்டிக்குதிரையின் முதுகில் கோதுமை மூட்டையை தாய்க்குதிரை ஏற்றிவிட்டது.  அது அவ்வளவு பாரமாக இருக்கவில்லை. ஆனால் குட்டிக்குதிரை சொன்னது: "அம்மா, என்னுடன் நீயும் வாவேன்." "ஏன்? எனக்கு உன்னுடன் வர நேரமிருந்தால் உன்னுடைய உதவி எனக்குத் தேவையில்லையே! நீ நேராக மில்லுக்குப் போய் விரைவாக வீட்டுக்குத் திரும்பவேண்டும். இரவுச் சாப்பாட்டுக்காக நான் காத்திருப்பேன்." முதுகில் கோது

விடுமுறை என்றால்...

படம்
சின்ன வயதினில் சிறுவர் விளையாட்டு சொன்ன மொழிகளில் சொக்கிடும் மனங்கள் அன்பைச் சொரியின்ற அன்னையின் பெருமிதம் தென்னை மரத்தடியில் தென்றலின் அரவணைப்பு கூடி ஓடுதலில் குடும்பத்தில் குதூகலம் ஆடிப் பாடுதலில் அனைவர்க்கும் ஆனந்தம் வாடி வீழ்ந்திடும் இலைகளின் நடுவினில் தேடிப் படுத்து வானினை நோக்குதல் பாடிய பாடலில் இசைந்திடும் மனங்கள் கோடிகள் சுற்றி ஓட்டப் பந்தயங்கள் சோடிகள் சேர்ந்து கூட்டத்தில் பாட்டுக்கள் சாடிகள் நிறைய நட்டனர் கன்றுகள் சின்னப் பானையில் சோற்றுச் சமையல் அன்னம் இட்ட கைகளுக்குப் படையல் நாவூற மெச்சிப் புகழும் தாய்மை நாலு தெருவிலும் நாட்டிடும் பெருமை சேலை கட்டிச் சிறுவர் இல்லம் காலை மாலை விளையாட்டில் இன்பம் விடுமுறை என்றால் வீட்டில் ஆனந்தம் விடுப்புப் பார்க்க சுற்றம் சூழ்ந்திடும் காலம் அது அந்தக் காலத்து இன்பம் வீட்டிலின்றோ  தொல்லைக் காட்சி வீதிக்கு வீதி இன்றோ டியூட்டறிகள் சித்திக்குமோ சிறுவர் சேர்க்கும் இன்பம்? அழ பகீரதன்

இழக்கவும் கூடுவதோ?

மாலை முழுவதும் விளையாட்டென மாணவர் இருந்த காலமுண்டு -நாம் மாணவராய் இருந்த காலமது கூண்டுக் கிளி போல் பள்ளிக்குள் கூடிப் பேசிக் களிப்பதுவோ பிரம்பெடுத்து அடிப்பர் ஆசிரியர் தரம் பிரித்து கற்பிக்கும் நடைமுறையில் மனம் ஒப்பிட மறுத்து நாடி நண்பருடன் விளையாடிட நாட்டம் கொள்ள மாலையில் வீட்டுக் கோடியில் இடம் தேடி நாட்டி வைத்த இன்பம் கோடி கெந்திப் பிடித்தலிலும் கோலி விளையாட்டிலும் தாயம் உருட்டலிலும் சிப்பி பெறுக்கலிலும் கொக்கான் வெட்டலிலும் கிட்டி புள்ளு விளையாட்டிலும் கிளித்தட்டு விளையாட்டிலும் கெட்டித்தனம் காட்டிடும் அந்தக் காலம் மறப்பதும் உண்டோ? கனிவில் மனம் இலயித்ததே! உண்டமோ உடுத்தமோ அறியோம் கண்டது கருத்தொருமித்த விளையாட்டே! பண்டுதொட்டு எம் பரம்பரையினர் பழக்கிவைத்த விளையாட்டு பாரம்பரியம் காத்த பண்பாடு... ஆரம்ப பள்ளியில் ஆரம்பித்த சினேகம் தேர்ந்த நட்பாய் நாடொறும் வளரும்... நீள் புவியில் இன்றோ நீள் பிரிவில் ஆள் காணா புலம்பெயர்வுகள் ஆனாலும் அன்று தொட்ட கைகளை இன்றும் அவாவும் அன்பு கொண்டு அணைக்கத் தோன்றும்... விளையாட்டில் விளைந்த இணைப்பை இழக்கவும் கூடுவதோ?  இதயம் கனக்