இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் தேர்வும் எனது அனுபவமும்

படம்
பண்டத்தரிப்பு காலையடியில் 5ந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற இருக்கின்றது. பரீட்சையில் தோற்றி வென்ற மாணவர்களினதும் தோற்ற மாணவர்களினதும் ஒன்று கலப்பாக அனுபவப் பகிர்வாக இருக்கவேண்டும் என்பதே இந்த ஒன்றுகூடலில் நோக்கமாக இருக்கின்றது  எனக் கருதுகின்றேன். மாணவர்கள் சிறு வயதிலிருந்தே போட்டிச்சூழலில் வளர்க்கப்படுகின்றார்கள். ஆயினும்  எதிர்காலத்தில் பிரகாசிப்பவர்களாக வென்றவர்களை விடத் தோற்றவர்களே அதிகம் இருப்பார்கள் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் நானும் பெரிதாக பிரகாசிக்கவில்லை எனிலும் தோற்றவர்களின் பட்டியலில் உள்ளவன் தான். தோற்றதே எனக்குள் ஒரு உத்வேகத்தை உருவாக்கியது. என்னைப்படிப்படியாக உருவாக்கியது. ஒருவகையில் பார்த்தால் நானும் மெல்லக் கற்கும் மாணவன் தான். இப்போதும் படித்துக்கொண்டு இருப்பவன் என்பது மிகப்பெரிய கதை. நானும் இந்த ஐம்பது வயதிலும் வங்கியியல் டிப்புளோமா பரீட்சைக்கு தோற்றுவதற்காக படித்துவிட்டு பரீட்சை மண்டபத்தில் போயிருந்து ஞாபகசக்தி இல்லாமல் முழிபிதுங்க விழிப்பது தனிக்கதை. அதைவிட, என்னோடு படித்து ஐந்தாம் வகுப்பில் புல

புதியது ஏற்கும் புரிவினில்

புரிந்தவரும் இல்லை தெரிந்தவரும் இல்லை உணர்ந்தவரும் இல்லை உய்த்தவரும் இல்லை நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாய் நிகழ்வுகள் வாட்டும் நிதமெனில் என்செய்ய! அறம் என நினைத்து இழந்தது அதிகம் திறம் என யாரும் புரிந்ததும் இல்லை ஐம்பது அகவையில் நிறைவென எதுவுண்டு அடங்க மறுக்கும் மனதொடு நானும். இயற்கையின் அமைப்பில் முதுமையின் ஏற்ப்பு படிமுறை வளர்ச்சியில் அடங்குதல் முறையே இனியொரு பிறப்பு இயலுதல் ஆகும் புதியது ஏற்கும் புரிவினில் பூக்கும் இது விதியென ஏற்கில் முதுமையும் தகும் இனிவரும் காலம் இளையவர்க்கு ஆகும்