இடுகைகள்

2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

book release3

கனடாவில் எனது கிராம மக்களின் அமைப்பான பண் கலை பண்பாட்டு கழகம் ஒழுங்கு செய்த எனது கவிதைத் தொகுப்பான எப்படியெனிலும் நூல் அறிமுகவிழாவில்

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் தேர்வும் எனது அனுபவமும்

படம்
பண்டத்தரிப்பு காலையடியில் 5ந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற இருக்கின்றது. பரீட்சையில் தோற்றி வென்ற மாணவர்களினதும் தோற்ற மாணவர்களினதும் ஒன்று கலப்பாக அனுபவப் பகிர்வாக இருக்கவேண்டும் என்பதே இந்த ஒன்றுகூடலில் நோக்கமாக இருக்கின்றது  எனக் கருதுகின்றேன். மாணவர்கள் சிறு வயதிலிருந்தே போட்டிச்சூழலில் வளர்க்கப்படுகின்றார்கள். ஆயினும்  எதிர்காலத்தில் பிரகாசிப்பவர்களாக வென்றவர்களை விடத் தோற்றவர்களே அதிகம் இருப்பார்கள் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் நானும் பெரிதாக பிரகாசிக்கவில்லை எனிலும் தோற்றவர்களின் பட்டியலில் உள்ளவன் தான். தோற்றதே எனக்குள் ஒரு உத்வேகத்தை உருவாக்கியது. என்னைப்படிப்படியாக உருவாக்கியது. ஒருவகையில் பார்த்தால் நானும் மெல்லக் கற்கும் மாணவன் தான். இப்போதும் படித்துக்கொண்டு இருப்பவன் என்பது மிகப்பெரிய கதை. நானும் இந்த ஐம்பது வயதிலும் வங்கியியல் டிப்புளோமா பரீட்சைக்கு தோற்றுவதற்காக படித்துவிட்டு பரீட்சை மண்டபத்தில் போயிருந்து ஞாபகசக்தி இல்லாமல் முழிபிதுங்க விழிப்பது தனிக்கதை. அதைவிட, என்னோடு படித்து ஐந்தாம் வகுப்பில் புல

புதியது ஏற்கும் புரிவினில்

புரிந்தவரும் இல்லை தெரிந்தவரும் இல்லை உணர்ந்தவரும் இல்லை உய்த்தவரும் இல்லை நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாய் நிகழ்வுகள் வாட்டும் நிதமெனில் என்செய்ய! அறம் என நினைத்து இழந்தது அதிகம் திறம் என யாரும் புரிந்ததும் இல்லை ஐம்பது அகவையில் நிறைவென எதுவுண்டு அடங்க மறுக்கும் மனதொடு நானும். இயற்கையின் அமைப்பில் முதுமையின் ஏற்ப்பு படிமுறை வளர்ச்சியில் அடங்குதல் முறையே இனியொரு பிறப்பு இயலுதல் ஆகும் புதியது ஏற்கும் புரிவினில் பூக்கும் இது விதியென ஏற்கில் முதுமையும் தகும் இனிவரும் காலம் இளையவர்க்கு ஆகும்

புதிய காலைக்கதிர் வெளியீடு

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர் மன்ற வெளியீடாக புதிய காலைக்கதிர் இதழ் வெளிவந்துள்ளது. அதனது மின்னிதழை காணகீழ்க்காணும் பக்கம் செல்லுங்கள் http://panipulam.net/manram/kalaikathir/index.html வெளியீட்டு நிகழ்வைக்காணொளியில் காண பாகம் 1 http://www.youtube.com/watch?v=3sg5kf4OdXs&nofeather=True பாகம் 2 http://www.youtube.com/watch?v=3sg5kf4OdXs&nofeather=True  

கசிப்பே ஒழியாயோ?

கசிப்பே ஒழியாயோ கசிப்பே ஒழியாயோ உண்பதற்கு உணவில்லை உடுப்பதற்கு உடையில்லை உழைக்கும் பணமெல்லாம் உனக்கே கொடுக்கின்றார் எங்கட அப்பாதான் கசிப்பே ஒழியாயோ கசிப்பே  ஒழியாயோ தங்கச்சிக்குப் பாலில்லை வாங்கவோ காசில்லை தாங்கொணா நோயிலை எங்கட அம்மாதான் அப்பாவோ எப்போதும் உன்னோட சகவாசம் கசிப்பே ஒழியாயோ கசிப்பே  ஒழியாயோ ரியூசன் போறதுக்கு பணமோ எனக்கில்லை கொப்பிபேனை வாங்கவும் காசேதும் எனக்கில்லை அப்பாவோ உன்மேலை பித்தாகித் திரிகின்றார் கசிப்பே ஒழியாயோ கசிப்பே  ஒழியாயோ ஏசினா அடிக்கின்றார் அம்மாவைக் கொல்லுகின்றார் காசுக்காய் அவரோ கையேந்தி நிற்கின்றார் நீயின்றி அவராலை இயங்கவே முடியல்லை கசிப்பே ஒழியாயோ கசிப்பே  ஒழியாயோ முன்னேற வழியில்லை முக்கினாலும் முடியல்லை உன்னழிவில் தானே எமக்கு முன்னேற்றம் உன்னை அழித்திடவென எண்ணம் கொள்கின்றோம் கசிப்பே ஒழியாயோ கசிப்பே  ஒழியாயோ 1988 இல் காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் பௌர்ணமிக் கலைவிழாவின் போது அன்றைய சிறுமியர் இக்கவிதையினை குழுப்பாடலாய் பாடினர்

காரல் மார்க்ஸ்

படம்
முதலாளித்துவ இயல்பை முழுதாக உரைத்தவன் நீ தொழிலாள வர்க்கம் தொய்விலாது வாழ வழிகண்ட தோழன் நீ! உலகாயதத்தின் சிறப்பை உணர்ந்து அது நன்றென்று அறிந்து பொருள் முதல்வாதம் தந்த பொக்கிசம் நீ! மார்க்சிஸம் மண்ணில் பதிய காரணமாயிருந்த நீ கம்யூனிஸத்தின் கடிவாளம் ஆனாய்! சோசலிஸத்தின் விஞ்ஞான உண்மை விளக்கியவன் நீ மாற்றம் என்றோ மண்ணில் நிகழுமென்று மார்தட்டி சொன்னவன் நீ! இன்றந்த மாற்றத்தில் சோவியத்தும் சீனமும் மகிழும் வேளையில்- உன் தத்துவத்தை உணர்ந்த நாம் உன்பாதம் படிந்த சுவடுகளைத் தேடி யாத்திரை செய்கின்றோம் யாத்திரையின் முடிவில் புத்துலகு இன்று பூத்துக் குலுங்கும் அந்த உலகத்தின் உள்ளத்தில் உன்நாமம் நிறைந்திருக்கும். பங்குனி 1984 இந்தக்கவிதை காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் இளைஞர்களும் பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய இளைஞர்களும் இணைந்து நடாத்திய சிறுசுகள் கையெழுத்துச் சஞ்சிகையில் இடம்பெற்றது. அழ.பகீரதன்

மாணவர் முயற்சியாக காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில்

படம்
வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது 'புதிய காலைக்கதிர்' கல்வி கலை இலக்கிய மாணவர் சஞ்சிகை. மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர்மன்ற வெளியீடாக, எமது கிராமத்தின் மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், சித்திரங்கள் போன் ற பல்வேறு ஆக்கங்களுடன் இது வெளிவரவுள்ளது. மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர் மன்றத்தால் ஏற்கனவே 80 களில் வெளியிடப்பட்ட காலைக்கதிர் சஞ்சிகையின் தொடர்ச்சியாக மாதாந்தம் இது வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மென்பிரதி இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படும் என்ற செய்தியை மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் சபா.தனுஜன் அவர்கள் அறியத்தந்துள்ளார். இம்முயற்சி கைகூடிட கரங்களை இணைப்போம்.

மறுமலர்ச்சி மன்றம் புதிய நிர்வாக செயற்பாடுகள்

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு அதன் கீழ் இளைஞர்கள் சிறுவர்கள் ஆர்வமுற இயங்கிவருகின்றார்கள். மன்ற மைதானத்தில் பின்பகுதியில் முளைத்திருந்த பற்றைகளை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள் என புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் சு.யாதவன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் மன்றத்தின் மாதாந்த மீண்டெழும் செலவீனங்களாக தற்சமயம் ,ரூ 20000 உள்ளதெனவும் அதனை மன்ற உழைக்கும் அங்கத்தவர்கள் மாதாந்த உதவு தொகையாக ரூ 1000/= செலுத்தவேண்டும் எனவும் மேலும் மன்ற அபிவிருத்திதிட்டங்கள் நிறைவு பெறும்போது இம் மீண்டெழும் செலவீனங்கள் ரூ 100000 வரையில் அதிகரிக்கும் எனவும் இந்த செலவீனங்களை ஈடு செய்ய மன்றத்தின் உள்ளூர் புலம்பெயர் அங்கத்தவர்கள் அபிமானிகள் ஒவ்வொருவரும் ரூ 1000 மாதாந்தம் உதவுதொகையாக வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார், முன்பள்ளியும் உள்ளக அரங்கும் யூலை மாதமளவில் நிறைவுபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அதனைத் தொடர்ந்து கோயில் முன்னகர்த்தப்பட்டு அமைக்கப்படும் எனவும் அதனுடன் இணைந்ததாக நீர்த்தொட்டியும் திறந்த வெளியரங்கும் அமைக்கப்படும் எனவும் ஒவ்வொர

மாணவர்களின் கல்வியில்...

மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இன்றைய தினம் எனது ஊரில் உள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் ஒரு நிகழ்வு இருப்பதாக வரச்சொல்லி சென்றேன். மாணவர்களுக்கான மன்றம் உருவாக்கும் நோக்குடன் அந்த ஒன்று கூடல் அமைந்திருந்தது. அங்கு பல வயதினரான மாணவர்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு கற்பதற்கான சூழல் இருப்பதில்லை என குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது. உண்மைதான் அயல் வீடுகளில் வானொலிச் சத்தம் அயல் கோயில்களில் ஒலிபெருக்கிச் சத்தம் என்ற பல பிரச்சனைகள் மாணவர்களின் கல்வி ஊக்கத்துக்கு தடைகளாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் வீடுகளில் வீடுகளிற்கிடையில் இடம்பெறும் மோதலும் சண்டையும் குடிவெறியும் கும்மாளமும் மாணவர் கல்வியில் ஊக்கத்தை கெடுப்பனவாகவே இருக்கின்றன. பலவீடுகளில் தொலைக்காட்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கி தடையாக இருக்கின்றன. மாணவர்களே இதனை ஒத்துக்கொள்கிறார்கள். இவற்றை திருத்தி மக்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருவார்களா! இந்த மாணவர் மன்றம் ஆக்கமுடன் செயற்பட்டு இக்குறைபாடுகளை களைந்து மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு வழி ஏற்படுத்துகின்றதா என பொறுத்திருந்

கனவுகளைக் கலைத்துவிடாதே

படம்
முத்தங்கள் பரிமாறிய முதலிரவின் கனவுகளை கலைத்து விடாதே! சித்தத்தை உன்மேல் வைத்தே தொலைதூர உழைப்பில் காலம் கழிக்கின்றேன். உனது கனவுகளைச் சிதைத்து விடாதே! முதல் குழந்தையின் முகத்தைக் கூடக் காணாது உங் கென்ன வேலையென்று கேட்கிறாய், அந்தக் குழந்தைக்காய் தான் உழைக்கிறேன். கனவுகளைச் சிதைத்து விடாதே! மனைவி எனது மனதைப் புரியாது பிற நாட்டு மயக்கில் வாழ்கிறாயே என வினவுகிறாய் நீ பூச்சூடி பொட்டிட்டு வகை வகையாய் கலர் கலராய் உடை யுடுத்தி நகை யணிந்து நீ இனிக்க நான் கண்டு மகிழ உழைக்கின்றேன் கனவுகளைக் கலைத்து விடாதே! அன்றொரு நாள் அந்தி மாலை வேளையில்  இச்சை மிக உனை அணைக்கையில் சொன்னாயே சொந்தமாய் வீடிருந்தால் எப்போதும் சுகந்தான் என்று! அதன் பொருட்டே உழைக்கிறேன் கனவுகளை சிதைத்து விடாதே! இப்போதைக்கு மட்டும் நனவில் அன்றிக் கனவில் மட்டும் கூடும் காதல் பறவையே முதலிரவின் கனவுகளைக்  கலைத்து விடாதே! -எனது அப்படியே இரு கவிதை தொகுப்பில் இடம்பெற்ற கவிதை

சித்திரையில் மலர்வோம்

படம்
எத்திங்கள் வரினும் இத்திங்கள் போலாகுமா சித்திரையில் எங்கள் சித்தம் மகிழும் அறிவீரோ? புத்துலகு பூத்தாப்போல் இத்தரை மகிழும் வித்தகமும் விஞ்ஞானமும் வளர்ந்து சித்திக்கின்றது  மண்ணில் புத்திமிக நாமும் மலர்ந்து பூத்திடுவோம் இத்தினத்தில்

எனது வயதினை ஒத்த அப்பாக்களின் பிள்ளைகளுக்கு

இலங்கை பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் குப்பனின் பையனும் ,சுப்பனின் பொண்ணும் ஏன் என் தந்தை சமூகத்தினால் ஒடுக்கப் படுகிறான் என்று என்றாவது சிந்தித்தீர்களா? சாதிக் கொடுமையால் ஒரு கிராமமே எரியூட்டப்பட்டதே அதற்காக போராடினீர்களா ? இன்றைய பொருளாதார வறுமை நிலை ஏன் ஏற்படுகிறது என்று கவலைப்பட்டீர்களா?அதற்கெதிராக ஒருங்கிணைக்கும் உணர்வாளர்களிடம் தேடிச் சென்றிருக்கிறீர்களா?ஏதாவது மாணவர் போராட்டம் தான் செய்து இருப்பீர்களா? அத்தகைய உணர்வாளர்களிடம் "மீடியா" வெளிச்சம் போட்டுக்காட்ட பணம் இல்லை.தேர்தலில் வெற்றி ஈட்டுவர்காக எவ்வளவு பணமும் கொட்டுவதற்கு தி மு க -அ தி மு க தயாராக உள்ளது .புலம் பெயர் நாடுகளில் இருந்து பெறும் பணத்தின் ஒருபகுதியை நெடுமாறனும்,வைக்கோவும்,சீமானு ம் சுவரொட்டிகளும்,கொடிக்களுமாக காட்டி,உங்கள் கல்வியைக் காவு வாங்கிறார்கள் தனியார் கல்லூரிகளில் உம்மை இணைத்துக் கொள்ள உம் அப்பனும் ஆத்தாவும் படும்பாடு எத்தகையது என்பது பற்றி என்றாவது சிந்தித்தார்களா?இலண்டனில் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். (  http://www.youtube.com/

கேளாய், பெண்ணே!

விட்டு விட்டு விழுகின்ற சொட்டு நீருக்காய் குழாயின் கீழ் சொண்டு நீட்டி காத்திருக்கும் குருவி போல் இடைக் கிடை அன்பு காட்டும் குடிகாரக் கணவனுடன் குடித்தனம் பண்ணுகிறாய்! பெத்த அன்னை தந்தை பார்த்து சொத்துக் கொடுத்து தந்த சொந்தம் எட்டி அடித்தால் என்ன செய்வது வாழ்தல் கடன் எங்கும் இப்படித்தான் ஆறுதல் சொல்லுகிறாய்! இராணுவ வதையாய் இரணமாய் உடம்பு ஆயினும் நீயோ  ஆக்கிய அவனே மணாளன் என மகிழ்ச்சி கொள்கிறாய் மூஞ்சை வீங்கிக் கண்ணீர் சிந்தினும் கணவன் அவனே உரிமை உண்டென எண்ணம் கொள்கிறாய்! ஏதென்று சொல்வேன் உன் அறிவீனம்! அடிமையாய் போவதற்கோ திருமண உறவு? இணையாய் வாழ்வதற்கே ஒப்பந்த மணமே! உதவியாய் இருப்பதற்கே உறவென்ற அமைப்பு, உதைப்பதற்கு அன்று! அடிக்கின்ற கையை தடுத்து நிறுத்து! அன்பின் தத்துவத்தை எடுத்துக் கூறு! முடியாது என்றால் முறித்து விடு உறவை! 1988 அப்படியே இரு தொகுப்பில் இடம்பெற்ற கவிதை -அழ.பகீரதன்

மீண்டும் களிப்போம்

காற்று வீசும் கங்குல் போதில்... மேற்கு வானில் பொழுது சாய்ந்த பின் பிறைநிலா வளர்வதும் முழுநிலா தேய்வதும் கண்டு மகிழ்ந்து கதைத்திருந்த நாட்கள்... கிணற்றுக் கட்டிலும் கோயிற் திண்ணையிலும் தேர்முட்டிப் படிகளிலும் நிலவொளியிலும் கும்மிருட்டிலும் கூடியிருந்த நாட்கள்... தொலைவில் பனி கொட்டும் பூமியில் குச்சறையில் தனியனாய் அன்றி இணையாய் உடல் போர்த்தி வாழும் நண்பா, நினைவில் நிழலாடுகிறதா அந்த நாட்களின் களிப்புக்கள்! பத்துப் பதினைந் தென்று கூடியிருந்தோம் குந்தியிருந்தோம் படுத்திருந்தோம் சாய்ந்திருந்தோம்... பல்விடயம் அலசித் தர்க்கப்பட்டோம் வயது வேறுபாடின்றி வளர்ந்திருந்தது நம் நட்பு. அயல் ஏசும் அளவிற்கு உச்சக் குரலில் உரையாடினோம். ஒன்றாய்ச் சேர்ந்து பாடினோம். அந்த- இனிமை நிறைந்த நாட்கள் இன்னமும் நினைவில் உள்ளதா? ஜேர்மன்....  டென்மார்க்... கனடா... சுவீஸ்... சவூதி...  ஓமான்... குவைத்... என ஒவ்வொருவராய் அகல மிஞ்சிய நாம் இருவரோ... மூவரோ... ஆயினும் கூடுகிறோம் பாடுதல் இலையெனிலும் பேசுகிறோம். தர்க்கப்படல் இலையெனிலும் விவாதிக்கின்றோம். நிலவின் ஒளியையும் கா

பெண்களை புடவை கட்டுமாறு நிர்ப்பந்திக்கும்...

அலுவலகங்களில் பெண்கள் புடவை (சாறி) கட்டிக்கொண்டு வருமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்தப் புடவைகட்டுமாறு நிர்ப்பந்திக்கப்படுவது பார்க்கப்பட வேண்டும். இதற்கு சொல்லப்படுகின்ற வார்த்தை அலங்காரமாக தமிழர் கலாசாரம் என்ற மூடுமந்திம் கற்ப்பிக்கப்படுகின்றது. தமிழர் கலாசாரம் எதுவென்பது கேள்விக்குறியானது. கண்ணியமான உடுப்பு உடுத்திக்கொள்ளவே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் விரும்புகின்றார்கள். ஆனாலும் எந்தவித த்திலும் கண்ணியமாக கருதப்பட முடியாத புடவையானது பெண்ணுக்குத்திணிக்கப்படுகின்றது. பெரும்பாலான இளம் பிள்ளைகள் சல்வார் கமிஸ்  இடுப்போ எடுப்போ தெரியாத வண்ணம் அணிந்துகொள்ளவே  விரும்புகின்றார்கள். ஆனால்யாழ்ப்பாண ஆணாதிக்கவாதம் இடுப்பும் எடுப்பும் காட்டும் புடவையையே தமிழ் கலாசாரம் என்று விதந்தோதுகின்றது. திருமணமான பெண்கள் தமது வசதி கருதி விரும்பி புடவை கட்டிக்கொள்ளலாம். ஆட்சேபனை இல்லை. ஆனால் இளம் பெண்கள் இந்த புடவையை தினமும் வரிந்து கட்டி மடிப்பு மடித்து அதுவும் மோட்டார் சயிக்கிளில் வரவேண்டும் என்று ஏன் தான் கரைச்சல் கொடுக்கின்றதோ இந்த ஆண்வர்க்கம். ஆண்வர்க்

மனிதம் எங்கே?

தெருவில் இறங்கி மனிதத்தை தேடுகிறேன் உருவில் அன்றி உணர்வில் காணேன்! விரக்தியின் விளிம்பில் தெரிவது உலகம் பூசலின் அழிவில் பூரிக்கும் மனிதர்! இனங்கள் குலங்கள் மனங்கள் குளங்கள் தினங்கள் மறையும் சனங்கள் அழியும்! பிணமோ நாட்டில் குணமோ ஏட்டில் பணமோ ஆட்சியில் கணமோ சிரிக்கும்! தூங்கும் மனிதம் விழிக்கும் நாளில் களிக்கும் உலகம் தெளிக்கும் இன்பம் -இது இளமையில் கிறுக்கியது அழ. பகீரதன்

புத்துலகொன்று...

படம்
புதிதாய் மலர்ந்த புத்துல கொன்று அதிலே இன்பம் தித்திப்பு கண்டு வதிவார் ஒன்றாய் கூடியவர் நின்று சாதித்து காண்பார் சரித்திரம் ஒன்று! கொலைவெறி கொண்ட கொடுஞ் சிலையர் நிலைகொள் அடிமைத் தனஞ் செய்வார் புலையரும் தீயரும் கொடியருங் கள்வரும் இலையிந்த இன்னல் இலாத உலகினில்! தீங்கெளா நெஞ்சம் தீரமுடை உள்ளம் எங்கெனும் காணா அன்பு மனம் ஓங்கிடு முழைப்பு கொண்டிடு மனிதர் தேங்கியே வாழ்வர் எழில்மிகு உலகில்! பாதகம் இல்லைப் பணிவும் இல்லை சாதகம் பார்த்துச் சாதிப்ப தில்லை பேதமை நெஞ்சம் கொண்டவ ரில்லை சாதனை செய்தே சரித்திரம் படைப்பர்! சாதிகள் இன்றி வகுப்புக ளின்றி சகலரும் சமம் சரிநிகர் என்று வர்க்கம் ஒழித்து வசந்தம் காண்பர் சொர்க்கம் இதுவே வேறுலக மில்லை! கொடுமை இல்லாக் கொள்கை வாழ்வு விடுதலை கொண்ட விவேக வாழ்வு கெடுதல் இன்றி வளர்ந்தே வரும் புத்துலகு ஈதில் புதுமை வாழ்வு! அழ.பகீரதன்

ஏனுந்த கலாசாரம்...?

உண்மைகள் கசக்கத்தான் செய்யும் நன்மைகள் விளையும் என்ற எதிர்பார்ப்பில் தான் எல்லாம்... யாழ்ப்பாணத்துக் கலாசாரம் யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்று வாய் கிழியக் கத்தல் எதிர் வீட்டில் கலியாணம் எடுப்பாய் காட்டி செய்தனர் என்றால் தன்வீட்டில் தன்பிள்ளைக்கு இன்னும் அதிகம் எடுப்பாய் காட்டச் செய்வதுவோ எங்களது கலாசாரம்? முத்துப் பந்தலும் மூக்கில் விரலை வைக்கும் தடபுடல் வீடியோப் பதிவும் உடன் வருமோ ஆயுளுக்கு கடன் பட்டு சோக்கு காட்டிப்போட்டு வீட்டில் வரிசையாய் கடன் கொடுத்தவர் நின்றால் அக்கம் பக்கம் என்ன நினைக்கும் பெருமை எதுவென அறியாப் பெருமையுள் ஆட்பட்டு ஏனிந்த ஆட்டம் பாட்டம் கூத்து... சோக்குக் காட்டி மணம்முடித்து வைத்து உமக்குள் மகிழும் பெற்றோரே கூடி இணைந்த மணமக்கள் தமக்குள் கூடி  மகிழ்வு கூட்டவென்று ஒரு ஐம்பதினாயிரம் கைக்குள் திணித்து கனிமூன் சென்றுவருக என்று வழியனுப்பி வைக்கும் பழக்கம் உமக்குள் உள்ளதுவோ... இல்லை.. இல்லை.... என்றால் ஏனுந்த கலாசாரம்...? அழ. பகீரதன்

சங்கதி கேளீரோ?

ஊரிலுள தனவந்தர் உவந்து தந்த பணத்தில் அருகமைந்த காணி ஆலயத்தின் உரித்தாயிற்று தேரிளுக்க நிலமது போதாதெனத் தானோ விசாலமாக நிலத்தை விரித்து விட்டால் பார்வைக்கு கோயில் எடுப்பாய் தெரியுமெனவோ அடுக்காய் பணம் கொடுத்தார் தனவந்தர் அது சரிதான் அவரது கொடைவள்ளல் தன்மையது மெச்சத் தக்கது தான். நிலத்தைப் பெற்ற நிர்வாகத்துக்கோ ஏகப்பட்ட குசி கூட்டம் போட்டனர் இந்தப் பெரிய நிலம் இப்படியே விட்டால் ஊரிலுள சிறுவர் கெந்திப் பிடிக்க வருவர் கிரிக்கற் கூட விளையாடுவர் நாடி வந்த இளைஞர் கழகம் அமைத்து பந்து உருட்டுவர் கண்ட சாதிப் பயலைச் சேர்ப்பினம் பெண் பிள்ளைகள் தெருவில் சென்றுவர கரைச்சல் கொடுப்பினம் விடக் கூடாது விரைவாய் மண்டபம் ஒன்று அமைப்பம் என்ற தீர்மானம் ஏகமனதாய் எடுத்தாச்சு அன்னதான மண்டபம் எழும்புது பாருங்கோ என்ன தம்பி அன்னதானம் சிறந்ததன்றோ ஏன்காணும் இப்பிடி எதிர்த்துக் கதைக்கிறீர்! சொன்னால் குறை விளங்காதையுங்கோ இந்தத் தானம் இரப்பவர்க்கன்று சொந்த வீடும் சொகுசு வாழ்வும் பெற்று வாழும் பெரியவர்கள் மடிப்பு குலையா பட்டு வேட்டி சால்வையோடு இட்டு உண்ணும் கூட்டுத்தானண்ணை இருந்தா

வியப்பாய் ஒரு விழா

நான் படித்த ஆரம்பப் பாடசாலை பண்ணாகம் வடக்கு அ மி த க பாடசாலை. இதனை நாங்கள் காலையடிப் பள்ளிக்கூடம் என்று தான் சொல்லுவோம். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரு நிகழ்வு இருப்பதாக சிறுவர்கள் சிலர் ஒரு அழைப்பிதழ் தந்துவிட்டு போனதாக வீட்டில் சொன்னார்கள். அந்தப் பாடசாலைக்கு அந்த நிகழ்வுக்கு எனது சின்ன மகனை கூட்டிக்கொண்டு போனேன். அங்கே பார்த்தபோது பலசிறுமிகள் சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என பலர் அந்த மண்டபத்தில் கூடியிருந்தார்கள். எனக்கு நன்கு தெரிந்த ஒருவர். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். எனது விருப்புக்குரியவர் என்று கூட சொல்லலாம். அவர் பெயர் தனுசன். அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்து இரண்டாவது வரிசையில் அமர்கின்றேன். மேடையில் வீற்றிருந்தவர்கள் தென்மாராட்சி கல்வி வலய பிரதி ப் பணிப்பாளர் திரு சுந்தரசிவம் அவர்கள். அவரும் இந்த பாடசாலையில் தான் ஆரம்பக் கல்வியை கற்றவர். மற்றவர் யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரியில் வணிகப் பிரிவுக்குப் பொறுப்பாக இருப்பவர் திரு நற்குணேஸ்வரன் அவர்கள். அவரும் இந்தக் கல்லூரியில் தான் ஆரம்பக் கல்வியை கற்றவர். இன்னொருவர் வட்டுக்கோட்டை  ஆர

இந்தியாவில் இருந்தபோது எழுதிய கவிதை ஒன்று...

நான் இந்தியாவில் சென்னையில் அப்போது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது இருப்பிடத்திற்கு பல நண்பர்கள் ஊரிலிருந்தும் வருவார்கள். போர் நடந்த காலம் ஆதலால் அவர்களில் பலர் வெளிநாடு சென்று வாழ்வதற்காகவே  புலம்பெயர்ந்திருந்தார்கள். அவர்களது நோக்கம் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதே ஆகும். அவர்களது அந்த பயணம் ஏனோகூடிய சீக்கிரம் கைகூடிவர  வில்லை. அப்போது அவர்களில் சிலர் தமது மனைவியின் கடிதத்தை என்னிடம் வாசித்துச் சொல்லச்சொல்லுவார்கள். அவர்களுக்கு வாசிக்கவும் எழுதவும் போதிய அறிவு இல்லாததால் எனக்கு அந்த பணியை சுமத்துவார்கள். அந்த அனுபவத்தில் நான் கற்பனையில் எழுதிய கவிதை தான் இது. காதலிக்கு கடிதம் நிலம் நோக்கி எனை நோக்கும் நீள் விழியாளே விழிப்பார்வை நீக்காது பேரூந்தில் ஏற்றியெனை அனுப்பி வைத்தாயே தொலைதேசம் சென்று பெரும் பொருள் சேர்க்க என்று! இன்னும் நான் இந்திய மண்ணில் தான் இந்தியாவும் வெளிநாடுதான் சொந்தமாய் பணம் சேர்க்க வழியிலை எனிலும் சொந்த நாட்டின் துக்கங்கள்... பீதியில் தேயும் ஆயுள்.. மனச்சஞ்சலங்கள் இங்கெனக்கு இல்லை! எனிலும் பருவத்தால் நிறைந்த உன்னழகைப் பார்த்திருக்கவும்

எப்போதோ எழுதிய கவிதை

தனிமை ஏக்கம் செந்தீப் பிளம்பாய் ஞாயிறு மறையும் அந்திப் பொழுதில் நீள்பிரிவில் உன்னை விடேனென விளம்பி மீள்வேன் ஈராண்டில் என உறுதி தந்து பேரூந்தில் ஏறிப் பிரிந்தாயே தலைவா! ஓரிரு நாட்கள் கொழும்பில் இருந்து முகிலூ டறுத்து வான்வழி செல்லும் வானூர்தி தன்னில் அமர்ந்தே சென்றாய் அமெரிக்கா அருகில் கனடாவில் நீயிருக்க கண்கலங்கி நானிங்கே! பனிமிகப் பொழியும் குளிர்ந்த பூமியின் குதூகல நினைவையும் பணம்பல கிடைக்கும் பாங்கையும் எழுதினாய் பக்கத்தில் நீயின்றி ஏக்கத்தில் நானிங்கு வாடிடும் வாட்டத்தை எப்படி அறிவாய்! மாலையில்  உந்தன் மார்பினை நினைந்தே இளையள் என் நெஞ்சம் இரந்தே நிற்கும் நிலையினை உணரா நீமிக உழைத்த பணத்தால் மனமது குளிருமென நினைக்கிறாய் நீயின்றி நாளோடுமோ? கடினம் மிகப்பட்டு அடிமையாய் நீயுழைத்து உறக்கம் குறைத்து உணவினைச் சுருக்கி எப்போதோ பிறக்கும் மகளுக்காய் உழைக்கிறாய் இப்போதே இருக்கும் இளையள் என்கனவை உணர்ந்து வாராயோ! சீவியம் செய்வதற்கு சிறிதச்சம் இருப்பினும் சித்திமாமி சோதரங்கள் உறவுடன் வாழ

காலையடி கிராமத்தில் கவிதை நூல் அறிமுகம் நிழல் படங்களாய்...

படம்
அழ. பகீரதனின் இப்படியும்… என்ற கவிதை நூலின் மூன்றாவது அறிமுக நிகழ்வு அவரது கிராமத்தில் அவரது தெருவில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் தைப்பொங்கல் தினத்தன்று நடைபெற்றது. இவ்விழாவில் கம்யூனிஸ்ட் தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் திருமதி வள்ளியம்மை அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றி விழாவில் பிரதி வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். விழாவில் அறிமுகவுரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களும் மதிப்பீட்டுரையை கலாநிதி ந. இரவீந்திரன் அவர்களும் ஆற்றினார். கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் தான் பிறந்த ஊரில் இருபது வருடங்களிற்கு பிறகு மன்றத்தில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

படித்ததில் பிடித்தது நன்றியுடன்

படம்
பாட்டா பாட்டிகளின் பாலுணர்வுகளும் செயற்பாடுகளும் பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல  உச்சரிக்க சங்கோசப்படுகிறோம். பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம். அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம். அம்மப்பாவிற்கு தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியைத் வருடிவிடும் அம்மம்மாவின் செயல் பிள்ளைகளுக்குச் சினமாக இருக்கிறது.  'தேவார திருவாசகம் ஓதிக் கொண்டு அல்லது வேதமொழிகளைப் படித்துக் கொண்டு மூலையில் கிடக்க வேண்டிய ஜன்மங்கள் அவர்கள்' போன்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் முதியவர்களின் பாலியல் உணர்வ

பொங்கல் நாளில் காலையடியில்…

படம்
மறுமலர்ச்சி மன்றம், காலையடி, பண்டத்தரிப்பு. அழ பகீரதனின் 'இப்படியும்......' கவிதை நூல் அறிமுக நிகழ்வு இடம் : மறுமலர்ச்சி மன்றம், காலையடி, பண்டத்தரிப்பு. காலம் : 14.01.2013 (திங்கள்) பி.ப. 3.30 எமது ஊரின் சமூக முன்னேற்ற செயற்பாட்டாளரும், இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவருமான அழ.பகீரதனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'இப்படியும்.......' நூலின் மூன்றாவது அறிமுக நிகழ்வு மறுமலர்ச்சி மன்றத்தினால் நடாத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் தலைமை : சு.யாதவன் (உபதலைவர் மறுமலர்ச்சி மன்றம்) வாழ்த்துரை : திரு சிறீஸ்கந்தராஜா (தலைவர் மறுமலர்ச்சி மன்றம்) அறிமுக உரை : சட்டத்தரணி சோ. தேவராஜா திறனாய்வு உரை : கலாநிதி ந. இரவீந்திரன் (சிரேஸ்ட விரிவுரையாளர் - தர்க்காநகர் கல்வியியற் கல்லூரி ) ஏற்புரை : அழ. பகீரதன்

பொங்கல் வாழ்த்து

படம்
பொங்குக பொங்கல் தங்குக இன்பம் மங்குக இன்மை ஓங்குக உண்மை நிறைக செழிப்பு மறைக வறுமை வளர்க பொதுமை வாழ்க புதுமை தைத்திருநாளாம் உழவர் நாளில் மேன்மை எய்துக மனிதம் எங்கும் வழிபிறக்கும் தையில் யுகம் தோன்றும் மனிதம் பொதுமையில் மலரும் மீண்டும்.