அறிவு நிறைந்திட!

மன்றத்து நூலகத்தில் மனதாற இருந்தேன்
என்றென்றும் எனக்கிது சொர்க்கம் என்பேன்
தொன்று தொட்டு தமிழ் வளர்ந்தவாறு கண்டேன்
நன்னெறி நம்மண்ணில் நடந்தவாறு உய்த்தேன்
சென்னெறியை சேமமுறச் செய்திடும் என்பேன்
இன்புற யார்க்கும் இயலுமாறு இருக்க செய்திடத்
தோன்றிடும் போதினில் அன்னை தமிழே!
அன்புற யாவர்க்கும் அறிவு நிறைந்திட 
என்றும் தாய்மொழிக் கல்வியே திறமென்பேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது