குளிர்காற்றும் உட்புக!

வான்முட்ட வளர்ந்த அரச மரம் எங்கே?
வாழைமரமும் வளர் வாகையும் எங்கே?
தேன்சுவைதரும் மாங்கனி தரு மரம் எங்கே?
தென்னை பனை கருவேம்பு தானெங்கே?
தேக்கும் பாக்கு தரு கமுகும் எங்கே?
வேம்பும் முருங்கையும் தேடற் கரிய
செம்பழந்தரு மாதுள செடியும் எங்கே?
ஆவலைத்தூண்டும் நாவல் மரம் எங்கே?
சுளை சுளையாய் பழந்தரு பலாமரம் எங்கே?
விளாத்தியும் இலுப்பையும் போயொழிந்ததும் எங்கே?
மரஞ்சூழ் முந்தையர் நிலம் நாலாய் பிரிபட
மண்குடிசை இருந்த இடம் மறைந்திட
எண்ணரிய மரம் சூழ்ந்த நிலமதில்
எத்தனை வீடுகள் எழுந்தன நெருங்கியே...
எப்படி குளிர் காற்றும் உட் புக இயலும்
சுட்டெரிக்கும் வெயிலைத் தூற்றி ஏதுபயன்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது