காரணமின்றியோ?
கொட்டும் மழையில் என் தேசம் அழுகிறதே
சட்டென காலம் மாறிய விந்தை இதுவே
இயற்கை அறியுமோ இது நமக்கு இயலுவதிலையென
பயிர் பச்சை பார்த்திட மழைவேண்டினமே
பயிர் பச்சை மூடியே பாய்கின்றதே வெள்ளம்
நாட்டிட முடியுமோ நமக்கிது வாய்ப்பென
நாம்படும் துயருக்கு காரணமும் அறிவமோ
வேதனைப் படுதற்கே மானிடப் பிறப்பெனவோ
பூமியின் வெப்பம் மேவியதன் விளைவிதுவோ
காரணமின்றியோ இயற்கையும் சீறுமோ அறிவீரோ?
கருத்துகள்