இனிவரும் காலங்கள்
மீண்டுமொரு முறை
மீள நினைக்கின்றேன்
ஆண்டு முப்பது ஆயிற்று
ஆண்டவரொடு கூடி
மாநிலக் கல்லூரியில்
மலர்ந்த இளமையில்
மாணவராய் நடந்த
மலரும் நினைவுகள்
அருள் நடராஜனின்
அருமையான பேச்சிலும்
மகாவிஷ்ணுவின்
தினமும் கூறும்
புதுக் கவிதையிலும்
ஆண்டவர் எந்தன்
காதோரம் கூறும்
கைக்கூக் கவிதைகளிலும்
கருணாநிதியின்
கீழைக் காற்றுத் தந்த
மரபுக் கவிதையின்
உரம் மிக்க வரிகளிலும்
தோய்ந்த எனது நாட்கள்
மீள ஒருதடவை நினைக்கின்றேன்
இரவி சங்கர் செங்குட்டுவன்
சீனிவாசன் பாபுவென
எனக்கிருந்த
இனிய அந்த நட்பு வட்டங்கள்
இனிநான் நாடி
தேடி அடைந்திட
என் காலமும் போதுமோ?
அவரவர் குடும்பம்
அவரவர் தொழில்கள்
அவரவர் தேடல்கள்
என நகர்ந்த ஆண்டுகள்...
என் மனவெளி எங்கும்
அந்த மூன்றாண்டுகளின்
அனுபவ பதிவுகளோடு...
இனிவரும் காலங்கள்
தமிழக மண்ணில்
என்பாதம் படியும்.
அழ பகீரதன்
மீள நினைக்கின்றேன்
ஆண்டு முப்பது ஆயிற்று
ஆண்டவரொடு கூடி
மாநிலக் கல்லூரியில்
மலர்ந்த இளமையில்
மாணவராய் நடந்த
மலரும் நினைவுகள்
அருள் நடராஜனின்
அருமையான பேச்சிலும்
மகாவிஷ்ணுவின்
தினமும் கூறும்
புதுக் கவிதையிலும்
ஆண்டவர் எந்தன்
காதோரம் கூறும்
கைக்கூக் கவிதைகளிலும்
கருணாநிதியின்
கீழைக் காற்றுத் தந்த
மரபுக் கவிதையின்
உரம் மிக்க வரிகளிலும்
தோய்ந்த எனது நாட்கள்
மீள ஒருதடவை நினைக்கின்றேன்
இரவி சங்கர் செங்குட்டுவன்
சீனிவாசன் பாபுவென
எனக்கிருந்த
இனிய அந்த நட்பு வட்டங்கள்
இனிநான் நாடி
தேடி அடைந்திட
என் காலமும் போதுமோ?
அவரவர் குடும்பம்
அவரவர் தொழில்கள்
அவரவர் தேடல்கள்
என நகர்ந்த ஆண்டுகள்...
என் மனவெளி எங்கும்
அந்த மூன்றாண்டுகளின்
அனுபவ பதிவுகளோடு...
இனிவரும் காலங்கள்
தமிழக மண்ணில்
என்பாதம் படியும்.
அழ பகீரதன்
கருத்துகள்
சிந்தித்துப் பார்க்கிறேன்