காரல் மார்க்ஸ்














முதலாளித்துவ இயல்பை
முழுதாக உரைத்தவன் நீ
தொழிலாள வர்க்கம்
தொய்விலாது வாழ
வழிகண்ட தோழன் நீ!

உலகாயதத்தின் சிறப்பை
உணர்ந்து
அது நன்றென்று அறிந்து
பொருள் முதல்வாதம் தந்த
பொக்கிசம் நீ!

மார்க்சிஸம்
மண்ணில் பதிய
காரணமாயிருந்த நீ
கம்யூனிஸத்தின்
கடிவாளம் ஆனாய்!

சோசலிஸத்தின்
விஞ்ஞான உண்மை
விளக்கியவன் நீ
மாற்றம் என்றோ
மண்ணில் நிகழுமென்று
மார்தட்டி சொன்னவன் நீ!

இன்றந்த மாற்றத்தில்
சோவியத்தும் சீனமும்
மகிழும் வேளையில்-
உன் தத்துவத்தை
உணர்ந்த நாம்
உன்பாதம் படிந்த
சுவடுகளைத் தேடி
யாத்திரை செய்கின்றோம்
யாத்திரையின் முடிவில்
புத்துலகு இன்று
பூத்துக் குலுங்கும்
அந்த
உலகத்தின் உள்ளத்தில்
உன்நாமம் நிறைந்திருக்கும்.

பங்குனி 1984

இந்தக்கவிதை காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் இளைஞர்களும் பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய இளைஞர்களும் இணைந்து நடாத்திய சிறுசுகள் கையெழுத்துச் சஞ்சிகையில் இடம்பெற்றது.

அழ.பகீரதன்

கருத்துகள்

indrayavanam.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் தோழரே.. கார்ல்மார்க்ஸ் கவிதை அருமை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது