மாணவர் முயற்சியாக காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில்

வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது 'புதிய காலைக்கதிர்' கல்வி கலை இலக்கிய மாணவர் சஞ்சிகை.

மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர்மன்ற வெளியீடாக, எமது கிராமத்தின் மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், சித்திரங்கள் போன்ற பல்வேறு ஆக்கங்களுடன் இது வெளிவரவுள்ளது. மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர் மன்றத்தால் ஏற்கனவே 80 களில் வெளியிடப்பட்ட காலைக்கதிர் சஞ்சிகையின் தொடர்ச்சியாக மாதாந்தம் இது வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மென்பிரதி இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படும் என்ற செய்தியை மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் சபா.தனுஜன் அவர்கள் அறியத்தந்துள்ளார். இம்முயற்சி கைகூடிட கரங்களை இணைப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என