மாண்டவர் யாரோ?

ஆண்ட பரம்பரை ஆள நினைத்து
வீழ்ந்த போதும்
வீழ்ந்த போது
மாண்டவர் யார்
வரலாற்றின் பக்கங்களைத்
தோண்டத்தோண்ட
ஆண்டர் அடிமையாய்
காலம் காலமாய்
ஆகியவரின் வழிவழி
வந்த பரம்பரையோர்
மூண்ட போரில்
ஆண்ட பரம்பரையோர்
கண்ட கனவினிற்காய்
மாண்டனரேல்
ஆண்ட பரம்பரையினர்
ஆள நினைப்பது
ஆரையென
மாண்டவர் உற்றவர்
அறிவரோ
உழைப்பே உயர்வென
வாழ்ந்த மனிதர்
இழைத்த கொடுமையென
எதைச் சொல்ல...
நாமுரைக்கும் மொழி
நமக்குள கூட்டின்
இணைப்பிற்கும்
இன்புற விளைந்த உறவிற்கும்
என்பதன்றி வேறொன்றறியார்
தேறியறிற்கா அனைவர்க்கும் கல்வி
ஆண்டபரம்பரையோருக்கு சரணம்
எனச் சொல்லவே
அகர முதல எழுத்தெல்லாம்...
தத்தம் மொழிபேசிக்
கூடி இயல்பாய்
இன்புற வாழ்ந்த
இனமென உணரா மாந்தர்
காண்டற் கரியகருவியொடு
மாண்டனரேல்
மாண்டதன் காரணம்
அறிவரோ
ஆண்ட பரம்பரை
ஆள நினைத்தது
அவரையே என
உணர்வரோ?



அழ பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என