தகுமோ ?

அன்பு கொண்டால் உலகில்
இன்பம் உண்டு என்று கண்டு
சின்ன உள்ளம் உவகை மேலிட
தன்னந் தனிய வாழும் தனிமை குலைக்க
இன்பம் நிறைந்த அந்திப் போழுது
என்னே கொடுமை !
ஊர் கூடிற்று
பேர் அறியாப் பேதை
ஊர் தெரியா உரவோன்
நேர் கண்டார் நவின்றார்
நில் என்றார் நடவென்றார்
சொல் என்றார் ; எடு
பொல் என்றார்
எல்லார் நிலை ஒன்றே , நன்று !
கூடி வாழக் குடில் இருந்த
காலம் ஒன்றுண்டு
நாடி உறவு வர
விருந்துண்டு மகிழ்ந்ததுண்டு
தேடி வருவார் இன்றி
வீடிருக்கும் இன்றோ
வீட்டில் கொலுவிருத்திய

காட்சிப் பெட்டகத்தில்
வேசை ஆடுவாள்
ஆடவர் உடலோடு
உடல் உரசி!
பேதை பெதும்பை
மங்கை நங்கை
இளம்பெண் பேரிளம் பெண்
அன்னை ஆச்சியோடு
பார்த்து மகிழ்ந்திடில்
இது தகுமெனக் கொளலோ


அழ பகீரதன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது