அன்னையை நினைந்து..

நிலவுக்குத்தெரியும் நின் அன்பு
நிலவின் குளிர்மையின் உன் அரவணைப்பு
நிலவை எனக்கு காட்டி
நிதம் கதைகள் சொன்ன அந்தக் காலம்
உலவும் ஞாயிற்றொளியில்
நிலவு ஒளிர்வதாய்
நீ எனக்குச் சொல்லித்தந்த காலம்
மலரும் பருவத்தை எனக்கு
மனதில் பதித்திட சொன்ன காலம்
பெண்மையின் கருத்தை
எனக்குள் பொங்கிடச் செய்த காலம்
பெண் படும் துயர்களை எனக்குள்
எண்ணிட நீ வைத்த காலம்
பெண் இன்னல்களை எனக்குள்
விதைத்துச் சென்ற காலம்
எழுத எனக்குள் சிந்தனையை
எழுப்பி விட்ட அந்தக் காலம்...
காலம் மீளாதோ என இந்தக் காலம்
ஏங்கித் தவிக்கின்றேன்.
இயலுமோ உனது காலத்துள்
நான் சென்றிட
இயலுமோ உனக்குள் நான்
கரைந்துவிட!
நீ இல்லாத இந்த நாட்களுள்
நான் என்னையே இழந்துவிட
அன்னையே
உன்னைத் தேடியே
நாட்களின் நகர்வுகள்!


இன்று  எனது அன்னை சிவகெங்கா பிறந்த தினம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

நாம்

இலங்கையன் என