இடுகைகள்

ஜூன், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிய காலைக்கதிர் வெளியீடு

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர் மன்ற வெளியீடாக புதிய காலைக்கதிர் இதழ் வெளிவந்துள்ளது. அதனது மின்னிதழை காணகீழ்க்காணும் பக்கம் செல்லுங்கள் http://panipulam.net/manram/kalaikathir/index.html வெளியீட்டு நிகழ்வைக்காணொளியில் காண பாகம் 1 http://www.youtube.com/watch?v=3sg5kf4OdXs&nofeather=True பாகம் 2 http://www.youtube.com/watch?v=3sg5kf4OdXs&nofeather=True  

கசிப்பே ஒழியாயோ?

கசிப்பே ஒழியாயோ கசிப்பே ஒழியாயோ உண்பதற்கு உணவில்லை உடுப்பதற்கு உடையில்லை உழைக்கும் பணமெல்லாம் உனக்கே கொடுக்கின்றார் எங்கட அப்பாதான் கசிப்பே ஒழியாயோ கசிப்பே  ஒழியாயோ தங்கச்சிக்குப் பாலில்லை வாங்கவோ காசில்லை தாங்கொணா நோயிலை எங்கட அம்மாதான் அப்பாவோ எப்போதும் உன்னோட சகவாசம் கசிப்பே ஒழியாயோ கசிப்பே  ஒழியாயோ ரியூசன் போறதுக்கு பணமோ எனக்கில்லை கொப்பிபேனை வாங்கவும் காசேதும் எனக்கில்லை அப்பாவோ உன்மேலை பித்தாகித் திரிகின்றார் கசிப்பே ஒழியாயோ கசிப்பே  ஒழியாயோ ஏசினா அடிக்கின்றார் அம்மாவைக் கொல்லுகின்றார் காசுக்காய் அவரோ கையேந்தி நிற்கின்றார் நீயின்றி அவராலை இயங்கவே முடியல்லை கசிப்பே ஒழியாயோ கசிப்பே  ஒழியாயோ முன்னேற வழியில்லை முக்கினாலும் முடியல்லை உன்னழிவில் தானே எமக்கு முன்னேற்றம் உன்னை அழித்திடவென எண்ணம் கொள்கின்றோம் கசிப்பே ஒழியாயோ கசிப்பே  ஒழியாயோ 1988 இல் காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் பௌர்ணமிக் கலைவிழாவின் போது அன்றைய சிறுமியர் இக்கவிதையினை குழுப்பாடலாய் பாடினர்

காரல் மார்க்ஸ்

படம்
முதலாளித்துவ இயல்பை முழுதாக உரைத்தவன் நீ தொழிலாள வர்க்கம் தொய்விலாது வாழ வழிகண்ட தோழன் நீ! உலகாயதத்தின் சிறப்பை உணர்ந்து அது நன்றென்று அறிந்து பொருள் முதல்வாதம் தந்த பொக்கிசம் நீ! மார்க்சிஸம் மண்ணில் பதிய காரணமாயிருந்த நீ கம்யூனிஸத்தின் கடிவாளம் ஆனாய்! சோசலிஸத்தின் விஞ்ஞான உண்மை விளக்கியவன் நீ மாற்றம் என்றோ மண்ணில் நிகழுமென்று மார்தட்டி சொன்னவன் நீ! இன்றந்த மாற்றத்தில் சோவியத்தும் சீனமும் மகிழும் வேளையில்- உன் தத்துவத்தை உணர்ந்த நாம் உன்பாதம் படிந்த சுவடுகளைத் தேடி யாத்திரை செய்கின்றோம் யாத்திரையின் முடிவில் புத்துலகு இன்று பூத்துக் குலுங்கும் அந்த உலகத்தின் உள்ளத்தில் உன்நாமம் நிறைந்திருக்கும். பங்குனி 1984 இந்தக்கவிதை காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் இளைஞர்களும் பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய இளைஞர்களும் இணைந்து நடாத்திய சிறுசுகள் கையெழுத்துச் சஞ்சிகையில் இடம்பெற்றது. அழ.பகீரதன்

மாணவர் முயற்சியாக காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில்

படம்
வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது 'புதிய காலைக்கதிர்' கல்வி கலை இலக்கிய மாணவர் சஞ்சிகை. மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர்மன்ற வெளியீடாக, எமது கிராமத்தின் மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், சித்திரங்கள் போன் ற பல்வேறு ஆக்கங்களுடன் இது வெளிவரவுள்ளது. மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர் மன்றத்தால் ஏற்கனவே 80 களில் வெளியிடப்பட்ட காலைக்கதிர் சஞ்சிகையின் தொடர்ச்சியாக மாதாந்தம் இது வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மென்பிரதி இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படும் என்ற செய்தியை மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் சபா.தனுஜன் அவர்கள் அறியத்தந்துள்ளார். இம்முயற்சி கைகூடிட கரங்களை இணைப்போம்.