இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாழ்ப்பாணத்திலிருந்து தாயகம் இதழ் வெளிவந்துள்ளது

தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக தாயகம் 84 வது இதழ் வெளிவந்துள்ளது. ஜனவரி-மார்ச் இதழாக வெளிவந்துள்ள இதழில் சி.சிவசேகரம், தெ.ஞா. மீநிலங்கோ, க. சிவகரன், க.தணிகாசலம் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் ஶ்ரீலேக்கா , அநாதரட்சகன், சு.தவச்செல்வன் ஆகியோரின் சிறுகதைகளும்  மு. மயூரன். மீநிலங்கோ, தி.அனோஜன், எஸ்.யாதவன், சிவசேகரம், சோ.பத்மநாதன், குழந்தை ம. சண்முகலிங்கம்  ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன, தொடர்புகளுக்கு ஆசிரியன் தாயகம் ஆடியபாதம் வீதி கொக்குவில்.

அறிவெனும் சுடரேற்றுவோம்

படம்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் புத்தகப் பண்பாட்டு பயணத்திற்காக..தணிகையினால் எழுதப்பட்ட பாடல் அறிவெனும் சுடரேற்றுவோம் -என்றும்  அணையாது காப்போம் அன்பெனும் நெய்யுருக்கி பண்பெனும் திரிமீது அறிவெனும் சுடரேற்றுவோம் மக்கள் மனங்களில் ஒளியேற்றுவோம் (அறிவெனும்) அறியாமை பேரிருள் அகல  ஆழ்ந்த உறக்க நிலை கலைய மனங்களில் அகந்தை சுயநலம் மறைய மானிட அன்பெங்கும் மலர (அறிவெனும்) பிறர் படும் துயர் கண்டு உதவிடும் உளம் கொண்ட வெள்ளைக் கமலங்களாய் இளம் உள்ளக் கமலங்கள் மலர (அறிவெனும்)

அறிவாலையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டொன்றின் நிறைவு நினைவுகள்.

நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலை நூலகம் ஆரம்பிக்கப்படு ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி உருவாக்கப்பட்ட ஆவணப் படம்.