நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலை நூலகம் ஆரம்பிக்கப்படு ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி உருவாக்கப்பட்ட ஆவணப் படம்.
யார் கேட்டார்கள் இரண்டாயிரத்து முப்பத்தொன்றின் ஓர் வைகறைப் பொழுதில் கேட்கின்றீர் ஊரில் யாரும் இல்லையா? தேர் இழுக்கவும் சாமி வாகனத்தில் இருத்திக் காவவும் சனம் இல்லையாம் கேள்வி மேல் கேள்வி கோயிலில் பூசை பார்க்கவும் ஆட்கள் இன்றி அலறும் ஒலிபெருக்கியில் அந்தணர் குரல் மேவிட சென்றங்கு பார்த்தால் ஐந்தோ ஆறோ பேரே அங்கிருந்து வணங்குகிறாராம் எங்கட சனத்துக்குக் கோயிலுக்குப் போறதவிடத் தோதான வேறென்ன பொழுதுபோக்கு தொலைபேசியில் கேட்கிறீர் நீவிரும் நாமும் சிறுபராயமதில் இராத் திருவிழாவில் நித்திரை விழித்துச் சின்னமேளமும் பெரியமேளமும் பார்த்த அந்தக் காலத்திலேயே ஊர் இருக்கும் எனும் நினைப்பா உமக்கு? போர் மூண்ட காலமும் போய் ஆண்டு இருபதுக்கு மேல் ஆச்சு தேர் ஒன்றே எம் இலக்கெண்டு மாறுமெண்டு ஆர் கண்டது அன்று பைரவரும் தேர் ஏறக் காலம் வாச்சுதெனக் காசனுப்பி வைச்சீர் சிறுவர் சிறுமியர் கூடிக் கெந்திப்பிடித்த வான் பார்த்த உள்வீதி வாய்ப்பான கூரையுடன் வண்ணமிகு சித்திரச் சுவர் நீள மாபிள் தரை ஜொலிக்கக் கோபுரம் மேவிடப் பெருங்கதவம் வாசலில்... யார் செல்வார் உள்ளே தேர் ஓடும் வீதிக்காய் அறம் கற்ற மண்டபமும் அவதிக்குள...
இலங்கையன் என... அழ.பகீரதன் தமிழர் தேசிய இனமெனத் தம்மை உணர்ந்து நிலைநிறுத்த சுயநிர்ணயம் இருக்குமெனில் முஸ்லிம் இனம் தேசிய இனமென யாவரும் ஏற்றிடக் காலம் கனியுமெனில் மலையகத் தமிழர் இனமென ஏற்றிட , இந்நாட்டின் முதுகெலும்பாய் சம ஊதியம் பெறும் காலம் அமைந்திடக் கூடுமெனில் சிங்கள மக்கள் மனங்களைச் சிறுமைப் படுத்த இனவாதம் கக்குபவர் தேரர் ஆயினும் ஓராத அரசொன்றை மதச்சார்பற்றுத் தேர்வர் எனில் கூட்டாட்சியில் சிங்களர் தமிழர் முஸ்லிம் மலையகத் தமிழர் சுயநிர்ணயம் ஏற்றிட இலங்கைத் தீவு ஒன்றியம் ஆயின் நானும் எழுவேன் இலங்கையன் என!
கருத்துகள்