அறிவெனும் சுடரேற்றுவோம்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் புத்தகப் பண்பாட்டு பயணத்திற்காக..தணிகையினால் எழுதப்பட்ட பாடல்
அறிவெனும் சுடரேற்றுவோம் -என்றும்
அணையாது காப்போம்
அன்பெனும் நெய்யுருக்கி பண்பெனும் திரிமீது
அறிவெனும் சுடரேற்றுவோம்
மக்கள் மனங்களில் ஒளியேற்றுவோம்
(அறிவெனும்)
அறியாமை பேரிருள் அகல
ஆழ்ந்த உறக்க நிலை கலைய
மனங்களில் அகந்தை சுயநலம் மறைய
மானிட அன்பெங்கும் மலர
(அறிவெனும்)
பிறர் படும் துயர் கண்டு உதவிடும்
உளம் கொண்ட வெள்ளைக் கமலங்களாய்
இளம் உள்ளக் கமலங்கள் மலர
(அறிவெனும்)
அறிவெனும் சுடரேற்றுவோம் -என்றும்
அணையாது காப்போம்
அன்பெனும் நெய்யுருக்கி பண்பெனும் திரிமீது
அறிவெனும் சுடரேற்றுவோம்
மக்கள் மனங்களில் ஒளியேற்றுவோம்
(அறிவெனும்)
அறியாமை பேரிருள் அகல
ஆழ்ந்த உறக்க நிலை கலைய
மனங்களில் அகந்தை சுயநலம் மறைய
மானிட அன்பெங்கும் மலர
(அறிவெனும்)
பிறர் படும் துயர் கண்டு உதவிடும்
உளம் கொண்ட வெள்ளைக் கமலங்களாய்
இளம் உள்ளக் கமலங்கள் மலர
(அறிவெனும்)
கருத்துகள்