புதியது ஏற்கும் புரிவினில்

புரிந்தவரும் இல்லை
தெரிந்தவரும் இல்லை
உணர்ந்தவரும் இல்லை
உய்த்தவரும் இல்லை

நினைப்பது ஒன்று
நடப்பது ஒன்றாய்
நிகழ்வுகள் வாட்டும்
நிதமெனில் என்செய்ய!

அறம் என நினைத்து
இழந்தது அதிகம்
திறம் என யாரும்
புரிந்ததும் இல்லை

ஐம்பது அகவையில்
நிறைவென எதுவுண்டு
அடங்க மறுக்கும்
மனதொடு நானும்.

இயற்கையின் அமைப்பில்
முதுமையின் ஏற்ப்பு
படிமுறை வளர்ச்சியில்
அடங்குதல் முறையே

இனியொரு பிறப்பு
இயலுதல் ஆகும்
புதியது ஏற்கும்
புரிவினில் பூக்கும்

இது விதியென ஏற்கில்
முதுமையும் தகும்
இனிவரும் காலம்
இளையவர்க்கு ஆகும்

கருத்துகள்

இராய செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் விரும்பியபடியே இன்னும் ஒரு பிறவி தங்களுக்கு வாய்த்திட வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது