மறுமலர்ச்சி மன்றம் புதிய நிர்வாக செயற்பாடுகள்

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு அதன் கீழ் இளைஞர்கள் சிறுவர்கள் ஆர்வமுற இயங்கிவருகின்றார்கள். மன்ற மைதானத்தில் பின்பகுதியில் முளைத்திருந்த பற்றைகளை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள் என புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் சு.யாதவன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் மன்றத்தின் மாதாந்த மீண்டெழும் செலவீனங்களாக தற்சமயம் ,ரூ 20000 உள்ளதெனவும் அதனை மன்ற உழைக்கும் அங்கத்தவர்கள் மாதாந்த உதவு தொகையாக ரூ 1000/= செலுத்தவேண்டும் எனவும் மேலும் மன்ற அபிவிருத்திதிட்டங்கள் நிறைவு பெறும்போது இம் மீண்டெழும் செலவீனங்கள் ரூ 100000 வரையில் அதிகரிக்கும் எனவும் இந்த செலவீனங்களை ஈடு செய்ய மன்றத்தின் உள்ளூர் புலம்பெயர் அங்கத்தவர்கள் அபிமானிகள் ஒவ்வொருவரும் ரூ 1000 மாதாந்தம் உதவுதொகையாக வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார், முன்பள்ளியும் உள்ளக அரங்கும் யூலை மாதமளவில் நிறைவுபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அதனைத் தொடர்ந்து கோயில் முன்னகர்த்தப்பட்டு அமைக்கப்படும் எனவும் அதனுடன் இணைந்ததாக நீர்த்தொட்டியும் திறந்த வெளியரங்கும் அமைக்கப்படும் எனவும் ஒவ்வொரு நாட்டிலும் தேர்ந்த மன்ற அங்கத்தவர்கள் இதன் நிதிசேகரிப்பார்களாக இருப்பார்கள் எனவும் இணைப்பாளர்களாக டென்மார்க் இரத்தினராசா கனடா பாலசுப்பிர மணியம் ஆகியோர் அவர்களுடன் தொடர்பு கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
மறுமலர்ச்சி மன்றத்தின் கணக்கு விபரம்:

marumalarchchi mantram
kalaiyady
pandetheruppu
current a/c no   9699332
bank   bank of ceylon
swift no    BCEYLKLX
branch code 7010-792
boc chankanai branch

கொடுப்பனவுகள் காசோலை மூலம் மேற்கொள்ளப்படும்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது