காலையடி கிராமத்தில் கவிதை நூல் அறிமுகம் நிழல் படங்களாய்...
அழ. பகீரதனின்
இப்படியும்… என்ற கவிதை நூலின் மூன்றாவது அறிமுக நிகழ்வு அவரது கிராமத்தில் அவரது தெருவில்
அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் தைப்பொங்கல் தினத்தன்று நடைபெற்றது. இவ்விழாவில்
கம்யூனிஸ்ட் தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் திருமதி வள்ளியம்மை அவர்கள்
கலந்துகொண்டு உரையாற்றி விழாவில் பிரதி வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். விழாவில்
அறிமுகவுரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களும் மதிப்பீட்டுரையை கலாநிதி ந. இரவீந்திரன்
அவர்களும் ஆற்றினார். கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் தான் பிறந்த ஊரில் இருபது வருடங்களிற்கு
பிறகு மன்றத்தில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள்