சங்கானையில் 'இப்படியும்..' நூல் அறிமுகவிழா

புத்தூர் மேற்கு கலைமதி சனசமூகநிலையித்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட "இப்படியும்..." கவிதை நூலின் அறிமுக விழா எதிர்வரும் 23.12.2012 பிற்பகல் சங்கானை இலங்கை வங்கி மேல் மாடியில் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. சமூகநீதிக்கான வெகுஜன இயக்கத் தலைவர்  திரு. மு. தியாகராஜா (இளைப்பாறிய உப அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் தொடக்க உரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களும் அறிமுக உரையை கவிஞர் எஸ். கருணாகரன் அவர்களும் மதிப்பீட்டுரையை சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியர் ந. குகபரன் அவர்களும் ஆற்றவுள்ளனர். ஏற்புரையை நூலாசிரியர் அழ. பகீரதன் ஆற்ற நன்றியுரை ஜெ.நிவர்சன் அவர்களால் ஆற்றப்படும். விழா தேசிய கலை இலக்கியப்பேரவை ஒழுங்கமைப்பில் நடைபெறும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என